Wednesday, October 24, 2012
Thursday, March 12, 2009
Tuesday, December 23, 2008
ammatha Ninaivu....

oru naal naanum avanghalum raavu nerathilae paduthukitu kathai pesitu irunthom,avangha sayanathilae irunthaangha....appo avangha kayya paakumpothu,kaila pachai kuthirunthuchu !!!!
ammatha,ithu ethukku pachai kuthirukinghal ???
athilladappa.....paralogam pogumpothu
ematharma raasa, "enakku enna kondu vanthae" nnu
kepaaru ???
appo naa kaila kuthirukirae pachaya kaati....
inghana paarungha ematharama raasa,ithe thaa kondu vanthen nnu
solluven,athukku thaan inthe pachai ????
!!!!!!???????
unghalkku yaarum ippadi oru kelvi gnanam undappa ???
Posted by
malaysiangroup
at
Tuesday, December 23, 2008
0
comments
Sunday, February 3, 2008
நடிகனுக்குத் தேவை சமூக அங்கீகாரம்

ஒரு நடிகனுக்குத் தேவை சமூக அங்கீகாரம்....எவ்வளவு பணம் சம்பாதித்தாலும்,தன்னை அடையாளம் கண்டு கொண்டு,ரசிகர்கள் அவனை அணுகி பாராட்டு தெரிவித்து,ஆட்டோகிராப் வாங்கி,கைகுலுக்கி....இப்படி பலவிதத்தில் அவர்களை அங்கீகரிக்கும் போது அவர்களுக்குள் ஏற்படும் ரசாயன மாற்றங்களிள், உள்ளம் பூரித்து,அகமகிழ்ந்து பிறவிப் பயன் அடைவார்கள்,இதற்கு நேர்மாறாக நடந்தால்...அவன் அடையும்பாடு எப்படி இருக்கும் என்று கற்பனை பண்ணிப் பாருங்கள்...அப்படி நடந்த சம்பவம் ஒன்று சொல்கிறேன்,
என்னோட தகப்பனார் சென்னை விமான நிலையத்திலிருந்து மலேசியாவுக்கு ஏர் இண்டியா விமானத்தில வந்த நேரம்,இவரோட பக்கத்து சீட்டுல தலைவாசல் விஜய் இருந்திருக்கிறார்,என்னோட தகப்பனார் அதிகம் சினிமா படம் பாக்கிற வழக்கம் இல்லாததால,இவரு பாட்டு இவரோட வேலையை பார்த்து கொண்டு,விமான பணிப்பெண் கொடுத்த உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்....
தலைவாசல் விஜய்க்கு அதுக்கு மேல பொறுக்கல,ஆரம்பிச்சார்...."சார் நான் யாருன்னு தெரியுமா"??
இவரு மேலயும் கீழயும் பார்த்துட்டு, "தெரியல"ன்னு சொல்லிட்டார்.
"சத்தியமா தெரியல"???
தெரியல...
சார் நான் தான் "தலைவாசல் விஜய்",தலைவாசல் படத்தில அறிமுகமாகி அதுக்கப்புறம் நிறைய படம் நடிச்சுருக்கேன்னு புலம்ப ஆரம்பிச்சுட்டார்,
என்னடா இது வம்பா போச்சுன்னு, நான் அதிகம் படம் பாக்கிறதில்ல,மன்னிச்சுக்கோங்கோன்னு சொல்லிட்டு அதுக்கப்புறம் மலேசியா வந்து இறங்குற வரை நிறைய சினிமா விசயம் பேசிட்டு வந்தாங்களாம்....
பாத்துங்கப்பா,இனிமே யாரும் நடிகர்களை பார்த்துட்டா குறஞ்சபச்சம் ஒரு வணக்கம் ஆவது சொல்லிடுங்கோ....என்னது "எங்களுக்கு எல்லாம் நடிகைகளை தான் கண்ணுக்கு தெரியும்ன்னு" சொல்றீங்கள்ளா....உங்கள எல்லாம் திருத்தவே முடியாது...ஹம்ம்....
Posted by
malaysiangroup
at
Sunday, February 03, 2008
4
comments
Saturday, February 2, 2008
திரும்பிப் பார்க்கிறேன்......(2)

இன்னைக்கு கனடா தமிழ் வானொலி கலசம் இணையதளத்தில் பாட்டு கேட்டுக்கொண்டிருந்தேன்,அதில் "மயக்கம் எனது தாயகம்,மவுனம் எனது தாய்மொழி,கலக்கம் எனது காவியம்"....... என்ற பாடல் வரிகளை கேட்டதும்,எனது நினைவலைகள் 1980க்கு போய்ட்டது,அப்போ நாங்க இருந்த வீட்டுக்கு எதிரா ஒரு புரட்டா கடை புதுசா வந்துச்சு,அவங்கள் இராத்திரி ஆனதும் புரட்டா,அசைவ வகைகள் விற்க ஆரம்பிச்சுடுவாங்கள்,விற்பனை ஆரம்பித்தற்கு அறிகுறியா ரெக்கார்ட் பாட்டு போட ஆரம்பிச்சுடுவாங்க...சில வகை பாட்டுதான் வெச்சிருப்பாங்க,அதனால போட்ட பாட்டையே தினமும் போட்டு அரச்ச மாவையே அரைப்பாங்கள்....அதில வர்ற ஒரு பாட்டு தான் மேற்படி பாட்டு,நான் அவங்ககிட்ட எப்படியோ பழகி ஆர்வக்கோளாருல தினமும் நான் தான் ரெக்கார்ட் பாட்டு போடுவேன்.இரவு 9.00 மணிவரை இப்படி தொடரும்....
எங்க வீட்டு மேல்மாடியில் ஒரு குஜராத்தி குடியிருந்தான்....இவனுக்கும் அந்த புரட்டாகடைக்கும் சரியான பொருத்தமாக இருக்கும்,புரட்டாகடை நடுநிசியில் கஸ்டமர் கேக்குற கொத்து புரட்டா போட்டுக் கொடுப்பாங்கள்,அப்போதான் 'ஏழரை' ஆரம்பிக்கும்,இவன் கல்லில் புரட்டாவை இரும்புக் கரண்டியால் கொத்தி எடுப்பான்,கன...கன..கன....கன..ன்னு ,குஜராத்திக்கு தூக்கம் கெட்டு காட்டுக்கத்து கத்த ஆரம்பிப்பான்,அப்போ அவன் பேசுற தமிழ் கேக்க சிரிப்பா இருக்கும்.அதுக்காக அவ்ங்கள் நிறுத்தவா முடியும் .இது ஒருபுறம் இருக்க,என்னோட அம்மத்தா புரட்டாக்கடைக்காரங்கள்கு டார்ச்சர் கொடுக்க ஆரம்பிச்சாங்கள்,எப்படின்னு கேக்குறீங்களா,2 புரட்டா கட்டச்சொல்லுவாங்கள்,சால்னாக்கு ஒரு தூக்கு கொடுத்து தூக்கு நிறைய கொடுன்னு அதட்டல் போடுவாங்க,அவனுங்க எதிர்வீட்டு ஆச்சி ஆச்சேன்னு கொடுத்துவாங்க,2 புரட்ட்டா வெச்சுகிட்டு,பத்தாக்குறைக்கு எங்கள்க்கு தோசையொ,இட்லியோ சுட்டுக் கொடுத்து,அதுக்கு தொட்டுக்க சால்னா,எப்படி டெக்னிக்... ஒருநாள்,இரண்டுநாள்....பரவாயில்லை,அடிக்கடி இப்படி கேட்டா???? இதில என்ன வேற அனுப்பி வாங்கி வரச்சொல்லுவாங்கள்,நான் வெட்கப்பட்டுகிட்டே அவ்ங்ககிட்ட கேப்பேன்,கொஞ்சநாள்ள புரட்டா வாங்கி வரச்சொன்னா நான் ஓடி ஒளிஞ்சுடுவேன்...கடைசில அந்த புரட்டாகடைக்காரன் நொடிச்சு போயி கடையை சாத்திட்டான்,
ஹே....நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு புரியுது,என் அம்மத்தா தூக்கு தூக்கா வாங்கின "சால்னானால" தான் நொடிச்சு போயி மூடி ஓடிட்டாங்கன்னு,ஹீ..ஹீ...அவங்க்ள்க்கு வியாபாரம் சூடு பிடிக்காததால தான் மூடிட்டாங்க.... அட உண்மைய சொன்னா நம்புங்கப்பா.
Posted by
malaysiangroup
at
Saturday, February 02, 2008
2
comments
Labels: Evening Mutton Stall
Friday, September 7, 2007
Posted by
malaysiangroup
at
Friday, September 07, 2007
0
comments
Thursday, September 6, 2007
Posted by
malaysiangroup
at
Thursday, September 06, 2007
0
comments
