Friday, September 7, 2007

Powered by Smilebox
Click to play | Make your own Smilebox

Thursday, September 6, 2007

50th Merdeka Celebration
Powered by Smilebox
Click to play | Make your own Smilebox

Saturday, September 1, 2007

சபை நாகரிகம்.


முதல் தமிழ் போஸ்டிங் முடிஞ்ச கையோட வீட்டுக்கு அவசர அவசரமா கிளம்பி,மனைவி பிள்ளைகளை கூட்டிக்கொண்டு ஒரு நிச்சயதார்ததிற்கு போனேன்.பிற்பகல் 6.30-8.30 என்று அழைப்பிதழ் பாறைசாற்றியது,நானோ கிளம்பியது 7.10க்கு.

ஒருவழியாக இடத்தை கண்டுபிடித்து கோவில் மண்டபத்தை அடைந்து,உள்ளே நுழைந்து பார்த்தால்,இங்கும் அங்குமா விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு சொந்தங்களின் பதிவு.நாங்கள் எங்கள் இருக்கையை அடைந்து,மணமக்கள் மேடையை வேடிக்கை பார்க்க துவங்கினோம்.மணி தான் நகர்ந்தது,ஆனால் விழா தொடங்கியபாடில்லை.என் மகன்கள் என்னை நச்சரிக்க ஆரம்பித்து விட்டார்கள் பசி...பசி என்று.

ஒரு வழியாக விழா ஆரம்பித்தது மணமகன் அறிமுகத்தோடு, நானும் மகன்களை தேற்றி , மேடையை நோக்கி ஏக்கோத்தோடு பார்க்க ஆர்ம்பித்தேன் எத்தனை மணிக்கு முடிக்க போகிறார்கள் என்று.மணமக்கள் பெற்றோர் சம்பிரதாயங்கள் முடிந்தது,அதற்குள் கூட்டத்தில் சலசலப்பு,இன்னும் யாரும் உணவு உண்ணச் செல்ல சைகை காட்டமாட்டேன்கிறார்களே என்று,

கடைசியாக மணமகள் அறிமுகம்...மணி 9.15.,கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக,அனுமதியை எதிர்பார்க்காமல் விருந்து அறையை நோக்கி செல்ல ஆரம்பித்ததை பார்த்து,எங்களுக்குள் தைரியம் வந்தது.நாங்களும் அறையை நோக்கி செல்ல ஆரம்பித்தோம்.(சபை அநாகரிகம்-1)

எல்லோரும் வரிசையில் நின்று அவரவர் வேண்டுகின்ற எடுத்துக்கொண்டு கைக்கும் வாய்க்கும் வேலை கொடுக்க,மொத்த கூட்டமும் அறைக்கு வந்து சேர்ந்தது.

கூட்டத்தில் ஒருத்தர் ஆரம்பித்தார்,"எல்லா நல்லா இருக்கு,ஆனா ஐஸ்கிரீம் இருந்தா நல்லா இருந்திருக்கும்"....காட்டரிங் ஆட்கள் அனுபவம் உள்ளவர்கள் போலும்,எல்லா உணவும் முடியும் தறுவாயில்,ஐஸ்கிரீம் டப்பிகள் வெளியே வந்தன...இங்கு தான் அநாகரிகம் முற்றியது,அவரவர் போட்டி போட்டுக்கொண்டு கைகொள்ளும் அளவுக்கு அள்ள ஆரம்பித்தார்கள்,சாப்பிட்டது போக இன்னும் அள்ளிக்கொண்டு வீட்டுக்கு கொண்டு சென்றார்கள்,(ஆசை வெட்கம் அறியாது என்ற பழமொழி தான் நினைவுக்கு வந்தது)பார்க்க பார்க்க வெறுப்பு தான் மிதமிஞ்சியது,படித்தவனுக்கும் பாமரனுக்கும் வித்தியாசமே இல்லை.

இப்படியான சமூகம் எப்படி திருந்தப் போகிறது ????...

திரும்பிப் பார்க்கிறேன்......


அப்பாடா,கடசியா தமிழ்ல ஒரு போஸ்டிங் போட போரேன்,நெனச்சாலே மனசு குளிருதுப்பா....

1ம் வகுப்போ,2ம் வகுப்போ, எந்த கிளாஸ்ன்னு மறந்து போச்சு,ஆனா அவன் பேரு மட்டும் நினைவு இருக்கு...பின்னே அவன் என்ன எமாத்தின விதம் அப்படி,பேரு ஹரி.. கிளாஸ் பாட்டு ஓடிட்டு இருக்கு,அவனும் நானும் டீச்சர் சொல்லிக் கொடுக்கிறத கவனமா கேக்குற மாதிரி பாவ்லா பண்ணிக்கிட்டு,எங்ங காரியத்தில குறியா இருந்தோம்.

அவன் கையில ஒரு 3 இன்சு பிளாஸ்டிக் டியூப் எடுத்துகிட்டு சரடு விட ஆரம்பிச்சான்,இந்த டியூப்போட ஒரு பக்கம் தொறந்தா சுடு தண்ணியும்,மறுபக்கம் தொறந்தா பச்சதண்ணியும் வரும்,அத்துக்கு என்கிட்ட ஒரு மெசின் இருக்குன்னான்.எனக்கு ஆச்சரியம் தாங்கல,அப்புறம் ஒரு பக்கம் சுடு தண்ணி,இன்னொரு பக்கம் பச்ச தண்ணினா சும்மவா,அவன்கிட்ட டீலிங்-க்கு இறங்கிட்டேன்.

"டேய்,எனக்கு இதக் கொடுடா,நா உன்க்கு வேற ஒன்னு தாரேன்",நா அவன் மண்டய கழுவ ஆரம்பிச்சேன்,அவன் ரொம்ப பிகு பண்ண ஆரம்பிச்சான்,பின்ன அவன ஒரு வழியா ஒத்துக்க வெச்சுட்டேன்.ஸ்கூல் ஹவர் முடிஞ்சதும் தர்றேன்னு ஒதுக்கிட்டான்,எனக்கு டீலிங் வெற்றி ஆனதுல அதுக்கப்புறம் கிளாஸ்ல மன்சு ஒட்டல....இருப்பு கொள்ளல, எப்போடா ஸ்கூல் முடியும்னு இருந்தேன்.

ஸ்கூல் முடிஞ்சதுக்கு அறிகுறியா பெல் அடிச்சது,நா அவன பாக்கிறேன்,அவன் பாட்டு பேக்க எடுத்துக்கிட்டு தறிகெட்டு ஓட ஆரம்பிச்சான்,நானும் அவன்கிட்ட எப்படியும் அந்த 8வது உலக அதிசயத்த வாங்க்கிடனும்னு அவன பிடிக்க ஓடினேன்,ஸ்கூல் கேட் கிட்ட நெருங்கிட்டேன் அவன பிடிக்க,சடார்னு என் சட்டை காலர பிடுச்சு நிப்பாட்டினார் கேட் வாச்சுமேன்,அவன் தப்பிச்சு ஓடிட்டான்.எனக்கு ஒரே ஏமாற்றம்.

இப்போக்கூட ஹோட்டல்ல தங்குறப்போ,பாத்ரூம்ல குளிக்க ஷவர் கைப்பிடிய திருகும் போது,அவன் நினப்பு தான் வருது,மனசுக்குள சிரிச்சுக்குவேன்.

இப்போ நீங்க சொல்லுங்க,நா ஒரு கூமுட்டைன்னு நினச்சுகிட்டீங்களா,இல்ல உங்களுக்கும் இதுபோல ஒரு கதை இருக்குன்னு நினச்சுகிட்டீங்களா,அட சும்மா சொல்லுங்கண்ணே !!!!!